சென்னை,ஆக.06- சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றிபெற்ற 100 சதவிகித பார்வையற்ற மாற்றுத்திறனாளி களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கத்தின் மூத்த தலைவருமான பிருந்தா காரத் தொலைபேசி மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் தமிழகத்திலிருந்து மதுரையைச் சேர்ந்த பூரண சுந்தரி மற்றும் சென்னையைச் சேர்ந்த பால நாகேந்திரன் ஆகிய இரு பார்வை யற்ற மாற்றுத்திறனாளிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப் பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறு ப்பினருமான பிருந்தா காரத் அவர்கள், வெற்றிபெற்றுள்ள இந்த இரு பார்வையற்ற மாற்றுத்திற னாளிகளையும் தொலைபேசியில் தனித்தனியே தொடர்புகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார், பார்வையற்ற மாற்றுத்திற னாளிகளின் விடாமுயற்சிகளுக்கும், தன்னம்பிக்கைக்கும் தனது இதய பூர்வ பாராட்டுதல்களை தெரிவிப்ப தாக பிருந்தா கராத் கூறியுள்ளதோடு, அவர்கள் தங்கள் பணிகளில் சிறந்து விளங்குவதற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்காக குரல் எழுப்பியவர்
இந்திய வரலாற்றில் 2011 ஆம் ஆண்டு வரை பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு சிவில் சர்வீஸ் பதவி களில் வாய்ப்புகள் வழங்கப்பட வில்லை. தோழர் பிருந்தா காரத் 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி களின் உரிமைகள் குறித்து பேசிய தோடு, 2009 ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று பணி வழங்கப்படாமல் இருந்த பார்வை யற்ற மாற்றுத்திறனாளிகளை அப்போ தைய பிரதமர் மன்மோகன்சிங்கிடம் அழைத்துச்சென்று அவர்களுக்கு பணி வழங்கிட கோரிக்கைவைத்தார். அதற்கு பின்னரே பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு சிவில் சர்வீஸ் பதவிகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.